Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம் 

கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம் 

கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்கம் 


ADDED : மார் 14, 2025 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 04:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில், தமிழ்த்துறையின் கணித் தமிழ்பேரவை, தர உறுதியளிப்புக்குழு சார்பில் இரண்டு நாள் கணினித் தமிழ் பயிலரங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். கணித் தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய பிரெஞ்சுத் துறை தலைவர் வெங்கட சுப்பராய நாயகர் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பில் கணினி, இணையத்தின் பங்களிப்பு குறித்து பேசினார்.

கல்லுாரி தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வாழ்த்தி பேசினார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்கவுரை ஆற்றினார். துணை பேராசிரியர் வஜ்ரவேலு நன்றி கூறினார். மாணவி அழகரசி தொகுத்து வழங்கினார்.

முனைவர் புஷ்பலதா, முனைவர் பட்டம்மாள், சிவக்குமார், சந்திரகலா சிறப்புரை வழங்கினர். திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us