/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 02:16 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கொலை வழக்கில் சாட்சி கூறிவிட்டு வந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை மிரட்டிய, மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரளம் அருகே கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன்,63; இவர் மகன் ராஜன்,22; என்பவரை, விழுப்புரம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக்,26; ஒருகோடி கிராமம் சத்யராஜ், 27; ரவீந்திரன்,24; ஆகியோர், கடந்த ஆண்டு கொலை செய்தனர். காணை போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக் உட்பட மூவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முனியன், அவரது மனைவி கஸ்துாரி, 55; மகள் ரேவதி,30; ஆகியோர் நேற்று சாட்சி கூறிவிட்டு வந்தனர்.
அப்போது வெளியே நின்றிருந்த குற்றவாளிகளான கார்த்திக் உட்பட மூவரும் சேர்ந்து, முனியன் உட்பட மூவரையும் மிரட்டி தாக்க முயன்றனர். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கார்த்திக் உட்பட மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.