Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு 

மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு 

மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு 

மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு 

ADDED : ஜூலை 10, 2024 04:22 AM


Google News
புதுச்சேரி, மருமகளை தாக்கிய மாமியார் மீது : சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குயவர்பாளையம் செல்லபெருமாள் கோவில் தெரு, 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி ஐஸ்வரியலட்சுமி, 27; வீட்டின் தரை தளத்தில் இவரது மாமியார் சுமலதா, 45; தங்கியிருந்தார். முதல் மாடியில் ஐஸ்வரியலட்சுமி கணவருடன் வசிக்கிறார்.

மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். ஐஸ்வரிய லட்சுமி தனது வீட்டில் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி., பொருத்தினார். இதற்கு மாமியார் சுமலதா எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த 6ம் தேதி வீட்டில் தனியாக இருந்து ஐஸ்வரிய லட்சுமியை, மாமியார் சுமலதா திட்டி தாக்கினார். சி.சி.டி.வி.,க்களை உடைத்து சேதப்படுத்தினார்.

இது குறித்து ஐஸ்வரியலட்சுமி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சுமலதா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us