Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை தாக்கிய  கணவன் மீது வழக்கு 

மனைவியை தாக்கிய  கணவன் மீது வழக்கு 

மனைவியை தாக்கிய  கணவன் மீது வழக்கு 

மனைவியை தாக்கிய  கணவன் மீது வழக்கு 

ADDED : ஜூலை 02, 2024 11:10 PM


Google News
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கோவிந்தசாலை, பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 29; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா, 23; சோடா கடை நடத்தி வருகிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கர் சோடா கடைக்கு சென்று மனைவி ரம்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ரம்யா கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சில நாட்கள் கழித்து கணவர் குறித்து முறையிட கோவிந்த சாலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு வந்த பாஸ்கர் மீண்டும் மனைவி ரம்யாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us