ADDED : ஜூன் 24, 2024 05:01 AM
புதுச்சேரி, : முத்திரப்பாளையம் தனபால் நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 54; இவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த லட்சுமி, 56; என்பவர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து, அந்த கழிவு நீரை சாந்தி வீட்டு எதிரில் ஊற்றினார்.
இதனை தட்டிக்கேட்ட சாந்தியை, லட்சுமி மற்றும் அவரது மகள் தமிழ்ச்செல்வி ஆகியோர் சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.