Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் மீது தாக்குதல்; மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்; மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்; மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்; மூவர் கைது

ADDED : ஜூன் 19, 2024 11:25 PM


Google News
புதுச்சேரி : கார் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் சரத்ராஜ், 24; இவருக்கும், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார், ஜெங்கன்பட்டு கார் டிரைவர் குணால், 22; என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், குணாலை தொடர்பு கொண்ட சரத்ராஜ், சமாதானம் பேசுவதாக புதுச்சேரிக்கு அழைப்பு விடுத்தார்.

புதுச்சேரி வந்த குணாலை கருவடிக்குப்பம் இடையன்சாவடிக்கு அழைத்து சென்ற சரத்ராஜ் அவரது நண்பர்கள் சஞ்சய், 24; லெனின்குமார், 23; ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சரத்ராஜ், சஞ்சய், லெனின்குமார் ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us