/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம் ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்
ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்
ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்
ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்
ADDED : ஜூன் 01, 2024 06:17 AM

வானுார், : ஆரோவில் பவுண்டேஷனின் 67வது நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆரோவில் நிர்வாக குழு தலைவரான தமிழக கவர்னர் ரவி தலைமை தாங்கினார்.
நிர்வாக குழு உறுப்பினரான , புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மதியம் 12:00 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், நிர்வாக செயல்பாடுகள், ஆரோவில் மேம்பாட்டுக்கான எதிர்கால திட்டங்கள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கிய கூட்டம் மாலை 6:30 மணி வரை நடந்தது.
கூட்டத்தில் ஆரோவில் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், ஆரோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவுன் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, ஆரோவில் வந்த கவர்னரை, கலெக்டர் பழனி மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்.