/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காதல் தோல்வியால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை காதல் தோல்வியால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
காதல் தோல்வியால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
காதல் தோல்வியால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
காதல் தோல்வியால் இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 18, 2024 11:01 PM
புதுச்சேரி: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராசு 46, கொத்தனார். இவரது மகள்பூஜா, 23; இவர் கோயம்புத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் கனகசெட்டிக்குளத்தை சேர்ந்த ரமேஷ்,23; என்பவரை காதலித்துவந்தார்.
இந்நிலையில் பூஜா, ரமேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அவரும் திருமணம் செய்துகொள்வதாக கூறி காலம் கடத்திவந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பூஜா கடந்த 13-ந் தேதி பழச்சாரில் எலி மருத்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரை குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் போலீசார் தற்கொலை செய்துகொள்ளவதற்கு முன் பூஜா எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில் பூஜா தன்னை ரமேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி துரோகம் செய்துவிட்டதாக எழுதியிருந்தார்.
அதன் அடிப்படையில் காலாப்பட்டு போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.