ADDED : ஜூன் 21, 2024 06:56 AM

புதுச்சேரி : பிள்ளைச்சாவடி அரசு வரதன் நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி அரசு வரதன் நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா, மரம் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்று மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.