தேர்தலுக்கு பின் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வருமா? 'தாயுமானவர்' திட்டம் குறித்து முதியோர் கேள்வி
தேர்தலுக்கு பின் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வருமா? 'தாயுமானவர்' திட்டம் குறித்து முதியோர் கேள்வி
தேர்தலுக்கு பின் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வருமா? 'தாயுமானவர்' திட்டம் குறித்து முதியோர் கேள்வி

தனியாக ஊழியர்கள் நியமிக்கணும்!
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொது செயலாளர் தினேஷ்குமார் கூறியதாவது: வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை அரசு சரி செய்ய வேண்டும்.
குறைகளை களைய வேண்டும்
கோவை மாவட்டத்தில், 85 ஆயிரத்து, 171 கார்டுதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர். 1,200 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

எல்லா பொருளும் கிடைக்குது
ரேஷன் கடைக்கு போயி, வரிசையில காத்துக்கிடந்து வாங்கிட்டு இருந்தேன். இப்போ வீட்டுக்கே கொண்டாந்து எல்லா பொருளையும் மொத்தமாக கொடுக்குறாங்க. சந்தோஷமா இருக்கு. வருஷம் பூராம் கொடுப்பாங்களா? இல்லை, இடையில நிறுத்திருவாங்களான்னு தெரியலை.
'அலைச்சல் மிச்சம்'
பக்கத்துத் தெருவுல ரேஷன் கடை இருக்கு; என்னால நடந்து போக முடியல. கைரேகை வச்சாத்தான் பொருள் போடுவாங்க. மெல்ல நடந்து போயி, வாங்கிட்டு இருந்தேன். இப்போ சுத்தமாவே நடக்க முடியல. ஆறு மாசமா ரேஷன் வாங்க போகல. ரெண்டு மாசமா வீட்டுக்கு வந்து கொடுக்குறாங்க; அலைச்சல் மிச்சம். எல்லா மாசமும் கொடுப்பாங்களான்னு தெரியலீங்க.
'நிறுத்தக் கூடாது'
என்னால கடைக்கு போக முடியாது. மாசா மாசம் என் மகன் ரேஷன் கடைக்கு மோட்டார் சைக்கிள்ல கூட்டிட்டுப் போவான். அவன் வேலைக்குப் போனா, கடைக்கு போக முடியாது. இப்போ, வீட்டுக்கு கொண்டாந்து கொடுக்குறாங்க. ரொம்ப சந்தோஷம்; இதை நிறுத்தக் கூடாது.