பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது 'தினமலர் - வழிகாட்டி'
பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது 'தினமலர் - வழிகாட்டி'
பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது 'தினமலர் - வழிகாட்டி'

கருத்தரங்குகள்
மூன்று நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில், நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ். சி.எஸ்., - ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக்டேட்டா. மிஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
வாய்ப்பு
புதிய படிப்புகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் நேரடியாக கேட்கும் வசதி கிடைக்கும். இதன் வாயிலாக, கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.
சிறப்பு விருந்தினர்கள்
கல்வி ஆலோசகர்கள், தொழில் துறை வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனை நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் துறையின் எதிர்காலம் குறித்து ஜெயபிரகாஷ் காந்தி; நீட், ஜெ.இ.இ., தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ்கள் குறித்து அஸ்வின்; தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் மற்றும் உதவித்தொகைகள் குறித்து நெடுஞ்செழியன்; எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து பரதன்; 21ம் நுாற்றாண்டு திறன்கள் குறித்து உதயகுமார் ஆகியோர் விளக்குவர்.
உறுதுணை
இந்நிகழ்ச்சிக்கு, 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் ஆகியவை செயல்படுகின்றன.