சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

தண்ணீர் தட்டுப்பாடு
நாட்டின் ஒட்டுமொத்த நீர் தேவைக்கு, சிந்து நதி தொகுப்புகளையே பாகிஸ்தான் நம்பியுள்ளது. இதனால், முதலில் குடிநீர் உட்பட தண்ணீர் பிரச்னையை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
விவசாயம்
பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு அடிநாதமாக விவசாயம் உள்ளது. கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை இங்கு முக்கிய பயிர்களாக உள்ளன. போதிய நீர் கிடைக்காவிட்டால், விவசாயம் பாதிக்கப்படும். இது மக்களின் வாழ்க்கையையும், உணவு பாதுகாப்பையும் பாதிக்க செய்யும்.
பொருளாதார பாதிப்பு
பாகிஸ்தானின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயம், 20 சதவீதமாக உள்ளது. மேலும், மொத்த வேலை வாய்ப்பில், 40 சதவீதம் விவசாயத் துறை வாயிலாகவே கிடைக்கிறது. விவசாய துறையில் ஏற்படும் பாதிப்பு, பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை உயர்வு, வறுமை போன்றவை ஏற்படும்.
மின்சார தட்டுப்பாடு
பாகிஸ்தானின் பெரும்பாலான அணைகள், சிந்து நதி தொகுப்பையே நம்பியுள்ளன. நீர் நிறுத்தப்பட்டால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். இது மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவு பாதுகாப்பின்மை
தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பாதிப்பு ஆகியவை, உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர வைத்து விடும். இதனால், இறக்குமதியை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது பெருத்த அடியாக இருக்கும். இதைத் தவிர, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும். மேலும், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மற்ற உயிரினங்கள் வாழ்க்கை முறை என, பல தரப்பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
![]() |