வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

தொழில் பூங்காக்கள்
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில், 14.17 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. தற்போது, 32.10 லட்சம் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நான்கு ஆண்டுகளில் மட்டும், 32 'சிப்காட்' தொழில் பூங்காக்கள், 16,880 ஏக்கரிலும், 28 'சிட்கோ' தொழிற்பேட்டைகள், 1,213 ஏக்கரிலும் உருவாக்கப்பட்டு உள்ளன.
மறுக்கின்றனர்
கடும் மழையிலும், வெயிலிலும், 100 நாள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு உரிய நிதியை கொடுங்கள் என்று, மத்திய அரசிடம் கேட்கிறோம். இன்று வரை மறுக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்கான நிதியை தர மறுக்கின்றனர். 'நீட்டிய இடத்திலே கையெழுத்தைப் போட்டு, நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போ' என்று சொல்லக்கூடிய அந்த வல்லாதிக்க மனோபாவம் காரணமாக, தமிழகம் இன்று வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
மண்ணின் குணம்
மக்கள் நலனுக்கு எதிராக, தலைநகரில் இருந்து எடுக்கப்படும், எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு, சென்னை மாகாணம் வழி வழியாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது, இந்த மண்ணின் குணம்.