மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்
மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்
மைசூரில் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு? முதல்வர் மனைவிக்கும் வழங்கியது அம்பலம்

ராஜினாமா
இந்நிலையில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 187 கோடி ரூபாய் முறைகேடு, அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விசாரணை குழு
அதாவது, மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மனை பெற பயனாளிகள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்கப்படும்.
இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கின், 'எக்ஸ்' பதிவு:
வால்மீகி மேம்பாட்டு வளர்ச்சி ஆணையத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாமல், பணியிட மாற்றம் செய்தது ஏன்? முதல்வர், யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
தாய் வீட்டு சீதனம்
இது குறித்து, முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
மைசூரு அருகே கேசரே கிராமத்தில் என் மனைவி பார்வதி பெயரில் 3.16 ஏக்கர் நிலம் இருந்தது.திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக, அந்த நிலத்தை என் மச்சான், எனது மனைவிக்கு கொடுத்தார்.மைசூரு நகர வளர்ச்சிக்கு அந்த நிலத்தை எனது மனைவி கொடுத்தார்.
போராட்டம்
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''சட்டவிரோதமாக நிலத்தை வாங்குவதற்கு, முதல்வரின் மனைவிக்கு என்ன அவசியம் உள்ளது. அவர் கொடுத்த நிலத்திற்கு பதிலாக, மாற்று இடத்தில் நிலம் கிடைத்துள்ளது,'' என்றார்.