மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு
மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு
மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு

முயற்சி
இவர்களில், ராஜசேகர்,ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், 2023 டிசம்பரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தமிழகம் அழைத்து வர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஓராண்டாகியும் பலன் கிடைக்கவில்லை. ராஜசேகர் மனைவி உஷா பதுங்கி இருக்கும் இடம் குறித்து துப்பு துலக்க முடியவில்லை.
ஏஜென்டுகள் கைது
இந்நிறுவன இயக்குநர்கள் வெளிநாடு தப்பியோடி விட்டதால், ஏஜென்டுகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். ஏஜென்டுகள் சிலரை கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் மின்மினி சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் பல ஏஜென்டுகளை பிடித்தனர்.
தற்கொலை
முதலீடு செய்தவர்களில் பலர் ஆரம்ப காலகட்டத்தில் 15 மாதங்கள் வரை வட்டி வாங்கியுள்ளனர். இதில் அப்பாவிகளான சிலர் முதலீடு செய்த ஒரு மாதம் மட்டும் வட்டி வாங்கியுள்ளனர். முதலீடு செய்த அடுத்த மாதமே நிதி நிறுவனம் கம்பி நீட்டியது.