பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்
பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்
பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்

மானாமதுரை: மானாமதுரையில் நேற்று அரசு டவுன் பஸ் ஓடிக்கொண்டிருந்த போது பின்பக்க டயர் தானாக கழன்றதை டிரைவர் உடனடியாக கவனித்ததால் பெரிய அளவில் ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று காலை குவளைவேலி கிராமத்திற்கு பயணிகளுடன் டவுன் பஸ் சென்றது. முத்தனேந்தல் அருகே சோமநாதபுரம் என்ற இடத்திற்கு அருகில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றதை கவனித்த டிரைவர் உடனடியாக சுதாரித்து பஸ்சை நிறுத்தி பார்த்தபோது பின் பக்க டயர் கழன்று இருந்தது.

இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கீழ்நிலையில் உள்ள டிரைவர், கண்டக்டர், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே தமிழக அரசும், போக்குவரத்து கழக அமைச்சரும் உடனடியாக ஓட்டை, உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.