மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பக்தி பரவசத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பக்தி பரவசத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; பக்தி பரவசத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

அலை அலையாக
மதியம், 3:00 மணிக்கு தான் மாநாடு என்றாலும், காலை, 10:00 மணி முதலே வண்டியூர் டோல்கேட் மைதானத்திற்கு பக்தர்கள் வருகை தந்தனர். மதியம், 3:00 மணியளவில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாய், அலை அலையாய் மைதானத்தில் குவிந்தனர்.
லட்சம் இருக்கை
மாலை, 5:00 மணிக்கே அரங்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு லட்சம் இருக்கைகளும் நிரம்பின. அதற்கு மேல் வருபவர்கள் அமர தரை விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர்.
அ.தி.மு.க., பங்கேற்பு
இம்மாநாட்டிற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், பங்கேற்ற முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்களுக்கும் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேடையில் நன்றி தெரிவித்தார்.
தன்னார்வலர்கள்
மாநாடு நடந்த வளாகத்தில் பக்தர்களை வழிநடத்துவதற்காக பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், போக்குவரத்து, பார்க்கிங் உள்ளிட்ட 27 குழுக்களை உருவாக்கி 2,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஹிந்து முன்னணி நியமித்திருந்தது.