தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்
தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்
தொழிலாளர் பாடு திண்டாட்டம்: லாபத்தில் இயங்கிய நிறுவனம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்ட அவலம்

வளர்ச்சியால் லாபம்
மேலும், மற்ற துறைகளுக்கும் லாப தொகை வழங்கி, அரசுக்கு முழு பயனாக இருந்தது. 1998ல் 30 கோடி ரூபாய் லாப ஈவு தொகையாக, தமிழக அரசுக்கு டான்டீ நிர்வாகம் வழங்கியது.
ஆட்குறைப்பு நடவடிக்கை
இதன் காரணமாக, கடந்த 2000மாவது ஆண்டில் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியால், சம்பளம் கொடுக்க முடியாமல் ஆட்குறைப்பு செய்ததால், உற்பத்தி வெகுவாக குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில், 8000 நிரந்தர தொழிலாளர்கள்; 5000 தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 3500 நிரந்தர தொழிலாளர்கள், 500 தற்காலிக தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். உற்பத்தி பணியில், 70 சதவீத பேரும், மற்றவர்கள் தோட்டம் மற்றும் நிர்வாக பணியில் உள்ளனர்.
கைவிடப்பட்ட சந்தை பணி
தரமான தேயிலையை சந்தைப்படுத்த, 2004ல் தமிழகத்தில் 'சென்னை, கோவை, மதுரை, திருச்சி,' என, 4 கோட்டம் ஏற்படுத்தி, அனுபவம் வாய்ந்த அலுவலர்கள் நியமித்து, குறியீடு இலக்கு ஊக்குவிக்கப்பட்டது.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
'டான்டீ' நிர்வாகம் ஆட்குறைப்பை மேற்கொண்டதால், காடுகளாக வளர்ந்த தேயிலை செடிகளால், வனவிலங்கு அச்சம் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணம் காட்டிய அரசு, இந்த இடத்தை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது.
தொழிலாளர் நிலை பரிதாபம்
மறுபுறம், டான்டீ தோட்டங்களில் உள்ள குடியிருப்புகள், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், குன்னுார், கோத்தகிரி, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், கொலப்பள்ளி, தேவாலா, மரப்பாலம், நாடுகாணி, மழை காலத்தில் வீடுகள் ஒழுகும் நிலையிலும், தடுப்பு சுவர் இல்லாமல் இடியும் நிலையிலும் உள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன.