கொலைக்களமாக மாறுகிறது கொங்கு பகுதி: நயினார் நாகேந்திரன்
கொலைக்களமாக மாறுகிறது கொங்கு பகுதி: நயினார் நாகேந்திரன்
கொலைக்களமாக மாறுகிறது கொங்கு பகுதி: நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 12, 2025 03:28 AM

திருப்பூர் மாவட்டம், சேனாதிபாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கச் சென்ற, முதிய தம்பதியரான வேலுசாமி - சாமியாத்தாள் ஆகியோர் பட்டப்பகலில், மர்ம முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சிவகிரி இரட்டை கொலை, ஈரோடு மூதாட்டி கொலை என, தொடர்ந்து, கொங்கு பகுதியில் வாரம், ஒரு கொலை சம்பவம் நடப்பது சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதை படம் பிடித்துக் காட்டுகிறது. முதியவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க இயலாத அளவுக்கு தி.மு.க., அரசு திறனற்ற நிலையில் உள்ளது.
பாசத்துக்கும், பண்புக்கும் பெயர் போன, கொங்கு பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக் கொள்ளும் தி.மு.க., அரசு.
வழக்கம்போல், தற்போதும் விசாரணை என, கண் துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், உடனே கொங்கு பகுதியில் முதியவர்களை தாக்கும் கயவர்களை கைது செய்து, மக்கள் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டியதில்லை.
- நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,