ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு
ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு
ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு

ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... (திருமலாபுரம்)
தென்காசி மாவட்டம், சிவகிரி ஒன்றியத்தில், திருமலாபுரம் கிராமத்துக்கு வடமேற்கில் 10 கி.மீ., தொலைவில், வாசுதேவ நல்லுாருக்கு அருகில் உள்ள குலசேகர பேரேரி கண்மாய்க்கு மேற்கில், 25 ஏக்கர் பரப்பளவில் இரும்பு கால இடுகாடு உள்ளது. இங்கு, 2024 முதல், கடந்த மே மாதம் வரை, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார் தலைமையில், முதல் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. அதில், 13.50 மீட்டர் நீளம், 10.50 மீட்டர் அகலத்துக்கு, 35 கற்பலகைகளால் ஆன அரணுக்குள் ஈமத்தாழிகள் வைக்கப்பட்டதும், அதன்மேல், 1.50 மீட்டர் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

மீள் அடக்கம்
சடங்கு பொருட்கள்

இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம்
மனிதர்கள், இரும்பை பயன்படுத்த தொடங்கிய காலமே இரும்பு காலம். இரும்பு பயன்பாட்டுக்குப் பின்தான், நவீன யுகத்தின் வளர்ச்சி வேகமானது. துருக்கியில் 4,225; ஐரோப்பாவில் 3,125 ஆண்டுகளுக்கு முன்பும் இரும்பு பயன்பாடு தொடங்கியது. நம் நாட்டின், உ.பி.,யில் 3,800; கர்நாடகாவின் ஹல்லுாருவில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.