அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி
அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி
அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி

எத்தனால் கலக்க மத்திய அரசு முடிவு
இந்தியாவில், கரும்பு ஆலைகளில், சர்க்கரை தயாரிப்பிற்கு பின் வெளியேறும், 'மொலா சஸ் கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டது. அதன்பின் உட்கொள்ள தகுதியற்ற மட்டரக அரிசி மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 10 சதவீத எத்தனால் கலப்பையே சாதிக்க முடிந்திருக்கிறது. எத்தனால் கலப்பதினால் பெட்ரோல் விலையை காட்டிலும் 2 ரூபாய் குறைத்து வழங்கிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எரிபொருள் இறக்குமதியைக் குறைப்ப தன் வாயிலாக அந்நியச்செலாவணி சேமிக்கப்படும். அதை, நமது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்; இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறும்.
தண்ணீர் தேவை குறைவு
தமிழகத்தை பொறுத்தவரையில், பரவலாக அனைத்து இடங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டாலும், பெரம்பலுார், துாத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சேலம் ஆகிய இடங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நீர் ஆதாரம் அதிகமில்லாத இப்பகுதிகளில் இவை அதிகம் விளைவதே, இதன் தண்ணீர்த் தேவை குறைவு என்பதற்கு முக்கிய ஆதாரமாகும். தற்போது, தமிழகத்தில் ஆண்டுதோறும், 30 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், தேவை, 45 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. மேலும், எத்தனால் உற்பத்தி நிறுவனங்கள் வரவால், இதன் தேவை இந்த வருடம் மட்டுமே 7 லட்சம் முதல் 10 லட்சம் டன் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலப்பு
இந்தியாவில், தற்போது சில இடங்களில் பெட்ரோலுடன் எத்தனால் 10-11 சதவீதம் கலக்கப்படுகிறது. தமி ழகத்தில் புதிதாக வரும் எத்தனால் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு, சுமார் 10 லட்சம் டன் மக்காச்சோளம் கூடுதலாக தேவைப்படுகிறது.இந்திய அளவில் 2023ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி,தற்போது எத்தனால்உற்பத்திக்காக 8 லட்சம் டன் மக்காச்சோளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2024 -25ம்ஆண்டுகளில் 30-35லட்சம் டன் மக்காச்சோளம் பயன்படுத்தப்படும். இரண்டு ஆண்டுகளில், எத்தனால் உற்பத்திக்கு மட்டும் 100 லட்சம் டன் மககாச்சோளம் தேவைஉருவாகும் என கணிப்புகள் வாயிலாகதெரிய வருகிறது.
ஆராய்ச்சிகள்
தமிழ்நாடு வேளாண் பல்கலை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்ச் சதவீதம் அதிகம் கொண்ட, புதிய மக்காச்சோள பயிர்களை எத்தனால் உற்பத்தியை மையமாக கொண்டு புதிய ரகம் கண்டுபிடிக்க பி.எச்டி., மாணவர்கள் வழிகாட்டுதல்கள் வழங்கி பணிகள் நடக்கின்றன.மேலும், மரவள்ளி போன்று ஸ்டார்ச் தன்மை கொண்ட வேறு பயிர்களையும் ஆராய்ச் சிக்கு அடிப்படை அளவில் உட்படுத்தியுள்ளோம். விவசாயிகள் தாராளமாக மக்காச்சோளத்தை பயிரிடலாம். அதற்கான அனைத்து வழிகாட்டுதலும் வேளாண் பல்கலையில் வழங்கப்படுகிறது. மேலும், இரண்டு போகம் மக்காச்சோளம் பயிரிட்டால் கட்டாயம் ஒரு போகம் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2.8- 3.2 டன் உற்பத்தியை விவசாயிகள் பெற இயலும். எந்த பயிர்களாக இருப்பினும் விவசாயிகள் அப்பகுதியின் தண்ணீர் வளத்தை மையமாக கொண்டு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்
