தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு
தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு
தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு

பாதிப்பு:
இதனால், பட்ஜெட் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட பாதிப்பை விட, குடும்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே அதிகம். ஆனால், குடும்பங்களின் கையிருப்பு ரொக்கமாக இல்லாததால், பங்குச்சந்தைகள் போல உடனடியாக பாதிப்பின் விளைவு தெரியவில்லை. நடப்பாண்டு துவக்கம் முதல், ஜூன் மாதம் வரை தங்கத்தின் விலை 14.70 சதவீதம் உயர்ந்தது. இதே காலகட்டத்தில், சென்செக்ஸ் குறியீடு 11 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.


நகை வியாபாரிகள்:
எனினும், அரசின் இந்த முடிவால், முறையாக வியாபாரம் செய்யும் நகை வியாபாரிகள் பலனடைவர் எனக் கூறப்படுகிறது. தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த, தங்கத்தின் மீதான வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். சுங்க வரி குறைந்ததை அடுத்து, கடத்தல் குறைவது என்பது அரசுக்கும் ஒரு சாதகமான விஷயம் தான். எனினும், இம்முடிவு எவ்வாறு அதன் வருவாயை பாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.