ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னப்பட்ட சதிவலை: கூட்டணி அமைத்த ரவுடிகள்; கை கொடுத்த தோழிகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார் கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்வதற்கு முன், ரவுடிகள் கவுரிசங்கர், குப்புசாமி, விஜி, கிச்சா, கீனோஸ் ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் வலம் வருவார். கூட இருப்பவர்கள் கொண்டு வந்து சேர்த்த சில பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டார். ஒரு கட்டத்தில் தொழில் போட்டி காரணமாக, அவருக்கும், தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கும் நேரடி பகை ஏற்பட்டது. இதனால், நாகேந்திரனின் எதிரியான பாம் சரவணன் கோஷ்டியில், ஆம்ஸ்ட்ராங் ஐக்கியமானார்.
சதி வலை
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றாலும், இதற்காக பின்னப்பட்ட சதி வலையில், மேலும் சில ரவுடிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் உள்ளனர்.
யார் இந்த அஞ்சலை?
கடந்த, 2001ல் அஞ்சலை, புளியந்தோப்பு காவல் நிலையத்தில், 'பி' பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தார். கணவரை பிரிந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி சின்னகேசவலு என்ற சின்னாவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்தார்.
நீக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மலர்க்கொடி, அஞ்சலை மற்றும் ஹரிஹரன் ஆகியோரை அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளில் இருந்து நீக்கி, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.