செலவில்லாமல் போர் விமானி ஆகலாமே... மாணவர்களுக்கு விமானத்துறையில் திறந்துள்ள கதவுகள்
செலவில்லாமல் போர் விமானி ஆகலாமே... மாணவர்களுக்கு விமானத்துறையில் திறந்துள்ள கதவுகள்
செலவில்லாமல் போர் விமானி ஆகலாமே... மாணவர்களுக்கு விமானத்துறையில் திறந்துள்ள கதவுகள்

தேசிய தொழில்நுட்ப தினம் முக்கியத்துவம்?
ஒரு தேசத்தின் வளர்ச்சி நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். நம் நாட்டில் நடந்த பல புரட்சிகள், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவையே. வரலாற்றில் நமது தேசம் பஞ்சங்களால் பாதிக்கப்பட்ட செய்திகள் உண்டு.
விமானத்துறையில் நம் வளர்ச்சி?
ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கிய போது, அது பயணியர் விமானமாக செயல்படவில்லை. மாறாக, அமெரிக்க ராணுவத்தின் போர் விமானமாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு காரணம், போரின் போது, உயரத்தில் இருப்பவர்களுக்கே நன்மை அதிகம் கிடைக்கிறது. இதனால், உலக அளவில் வானில் வட்டமடிக்கும் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, முதன் முதலாக 1951ல் 'ஹெச்.டி., - -2' என்ற விமானத்தை இந்தியா வடிவமைத்தது. பிறகு 1961ல் 'ஹெச்.எப்.-, - 24' அல்லது 'மாருத்' என்ற முதல் போர் விமானத்தை நம் நாடு உருவாக்கியது. இதையடுத்து விமானத்துறையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2001ல் தேஜஸ் என்ற நான்காம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்தோம். தற்போதும், பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன. போர் விமானம் மட்டுமின்றி 'ஹன்சா', 'சாரஸ்' உள்ளிட்ட சிவில் விமான முயற்சிகளும் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன.
பெங்களூருக்கும், விமானத்துறைக்கும்...
பெங்களூரை 'விமான தலைநகரம்' என்று சொல்ல கூடிய அளவிற்கு விமானத்துறை சார்ந்த நிறைய ஆராய்ச்சிகளும், முன்னெடுப்புகளும் நடந்து வருகின்றன. இந்தியா 1951ல் முதன் முதலில் உருவாக்கிய ஹெச்.டி., 2 விமானம்; 1961ல் உருவாக்கிய ஹெச்.ப்., - -24 என்ற முதல் போர் விமானம், எல்.சி.ஏ., எனும் இலகுரக போர் விமானம், பயணியர் விமானமான சாரஸ் போன்ற பல விமானத்திட்டங்கள் பெங்களூரில் உள்ள ஏ.டி.ஏ., மற்றும் ஹெச்.ஏ.எல், தேசிய விமானவியல் முகமை மற்றும் தேசிய விமானவியல் ஆய்வகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
போர் விமானிகளின் இருக்கையின் சிறப்பு?
போர் விமானியின் இருக்கை 'பைரோ காட்ரிஜ்' எனும் வெடிமருந்து குப்பிகளின் மீது அமைந்து உள்ளது. விமானி இருக்கையை மூடியுள்ள 'கேனோபி' என்ற கண்ணாடிக் கதவிலும் வெடி பொருள் பொருத்தப்பட்டிருக்கும். அவசர காலத்தில் விமானி வெளிவர வேண்டும் என்றால், முதலில் வெடி பொருள் உசுப்பப்படும்; கண்ணாடி கதவு அகற்றப்படும்.
பாராசூட்டின் பயன்பாடுகள்
விமானத்துறையில் கால் பதிக்க...
விமானம் மற்றும் விண்வெளி சார்ந்த மூன்று படிப்புகள் உள்ளன.
விமானத்துறையில் பயிற்சி நிறுவனங்கள்
விமானவியல் சார்ந்த படிப்புகளை தவிர, பொறியியல் துறையில் பல துறையை சார்ந்தவர்களும் விமானத்துறையில் பணியாற்றலாம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின்னணு தகவல் தொடர்பியல்., உலோகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள், கணிதவியல், இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் பட்ட மேற்படிப்புகளை படித்தவர்களும் விமானத்துறையில் பணியாற்றலாம். இதுமட்டுமின்றி, ஏரோஸ்பேஸ் மெடிசன் துறையில் மருத்துவர்கள் பயின்று தேர்ச்சி பெறுவதன் மூலம், அவர்களும் விமானத்துறையில் நுழையலாம்.
பட்டம் பெறாதவர்களும் பணியாற்றலாமா?
பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி டிப்ளோமோ இன்ஜியனிரிங், ஐ.டி.ஐ., படித்தவர்கள் விமான உற்பத்தி, உபகரணங்கள் உற்பத்தி, சோதனைகள், பராமரிப்பு போன்றவற்றை செய்யும் நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்ள முடியும். விமானப் பராமரிப்புக்கென தனியாக சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
பயணியர் விமானி ஆவது எப்படி?
பிளஸ் 2 வில், கணிதவியல், இயற்பியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். இவர்கள், டி.ஜி.சி.ஏ., எனும் பொது விமான இயக்குனரகம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும். இதில் ஐந்து பாடங்கள் உள்ளன. இது குறித்து டி.ஜி.சி.ஏ.,வின் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வை எழுத பயிற்சி கூடங்கள் உள்ளன. எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுவோர், 'மாணவ விமானி உரிம'த்தை வாங்க வேண்டும். இதன்பின், ஒரு மாணவர் 200 மணி நேரம், விமானத்தை இயக்கி பயிற்சி பெற வேண்டும். அதிலும், 100 மணி நேரம் தனியாக இயக்க வேண்டும். இதன்பின், நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெற்றால் சி.பி.எல்., எனும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும். இந்த லைசென்ஸ் பெற்றவர்கள் ரேடியோ டெலிபோன் ஆப்பரேட்டர் எனும் பயிற்சியை பெற்று, அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட வகையான பயணியர் விமானத்தை இயக்க, அந்த வகை விமானத்தில் டைப் ரேடிங் என்ற அங்கீகாரத்தை பெறுவதும் அவசியம். இதுவே விமானி ஆவதற்கான வழிமுறைகள். விமானி ஆவதற்கு, அரசு பயிற்சி நிறுவனங்களில் ஏறக்குறைய 55 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். இதற்கு வங்கிகளில் கல்விக் கடனுதவி கிடைக்கும்.
விமானத்துறை வேலைவாய்ப்புகள்
விமானத்துறையில் ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு போன்றவற்றில் நிறைய வேலைகள் உள்ளன. டி.ஆர்.டி.ஓ., - என்.ஏ.ஏல்., - ஹெச்.ஏ.எல்., போன்ற நிறுவனங்களிலும்; விமானத்துறையில் உள்ள தனியார், பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்ளன. வேலைக்காக காத்திருக்காமல் ஸ்டார்ட் அப் என்ற துளிர் நிறுவனங்களை உருவாக்கி, வேலையை துவங்கலாம். பாதுகாப்பு தொழில்துறை தடம் என்ற புதிய திட்டம் தமிழகம், உத்தர பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் வான்வெளி பாதுகாப்பு துறைக்கான பூங்காக்கள், ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்காக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஏறக்குறைய 4,700 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன. விரைவில் விமானத்துறையில் பலருக்கும் வேலை கிடைக்கும்.