கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி
கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி
கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வி!: கழிவுநீரில் கரைந்து போன ரூ.1,479 கோடி

தாரைவார்ப்பு@@
கடுமையான சட்டம் வேண்டும்
சென்னையில், பெரிய நிறுவனங்கள் முதல் குடியிருப்புகள் வரை, குடிநீர் வாரியத்திற்கு வரி செலுத்த தயங்கி, மழைநீர் வடிகால்களில் நேரடியாக கழிவுநீர் இணைப்பை விடுகின்றனர். இந்த கழிவுநீர் இணைப்பை, கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, முழுமையாக துண்டிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பை கொட்டுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். இல்லை என்றால், கூவத்தை சுத்தப்படுத்துவது நீரில் போடப்பட்ட உப்பாகவே இருக்கும்.
ஒருங்கிணைந்த பணி அவசியம்!
கூவம் ஆற்றை சுத்தப்படுத்த, அரசு பல பணிகள் மேற்கொண்டாலும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இரண்டு வழிமுறைகளை கடைப்பிடித்தால் கூவம் ஆற்றை, அதன் இயல்பில் மீட்க முடியும். ஒன்று கழிவுநீர் விடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்; மற்றொன்று கூவம் ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும். அதுபோன்று பல்வேறு இடங்களில் நீரை சேமிப்பதன் வாயிலாக நிலத்தடி நீர் கிடைப்பதுடன், மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் விட பல தன்னார்வ நிறுவனங்கள் தயாராக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
கூவத்தின் பரப்பு தெரியவில்லை
கூவம் ஆற்றின் நீளம், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு அகலம் போன்ற தரவுகள் அரசிடம் இல்லை. தகவலுக்கு ஒரு முழுமையான சர்வே எடுப்பது அவசியம். கூவம் ஆற்றில் கழிவுகள் எந்தளவுக்கு, எத்தனை மீட்டருக்கு இருக்கின்றன என்பதை கண்டறியவும் சர்வே எடுக்க வேண்டும்.