கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்
கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்
கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்

சம்பவங்கள்
அத்துடன், கடந்த மாதம் திருவொற்றியூரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டி தள்ளி, நீண்ட துாரம் இழுத்துச் சென்றது; காப்பாற்ற முயன்றவரையும் முட்டித் தள்ளியது. இவை போன்ற சம்பவங்கள், தமிழகம் முழுதும் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன.
இது குறித்து ஜோதிடர்கள் கூறியதாவது:
ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார்: குரோதி ஆண்டு குறித்த வெண்பாவில், 'கோரக் குரோதிதனில் கொள்ளை மிகும், கள்ளரினால் பாரினில் சனங்கள் பயமடைவார்' என்று கூறப்பட்டுள்ள வரிகளே, இந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை நமக்கு வெளிப்படுத்தி உள்ளன.
ஆன்மிக சிந்தனை
நாட்டில் போதைப் பொருட்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக அளவு புழக்கத்தில் இருக்கும்; மக்கள் பாதிப்படைவர். குப்பையிலிருந்து புதிய வைரஸ் நோய்கள் உண்டாகி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக விபத்துகள் நேரும். காவல் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும்.
விஷக்கிருமிகள்
ஜோதிடர் சிவகுரு, நங்கநல்லுார்: சுத்த வாக்கிய பஞ்சாங்க கணக்கின்படி, இந்த குரோதி ஆண்டு தமிழ் வெண்பா பாடலின்படி, விஷக்கிருமிகள் பரவுதல்; குப்பைகளில் இருந்து தொற்று உருவாகுதல்; சுற்றித் திரியும் தெரு நாய்களால் பாதிப்பு ஏற்படுதல்; சில விஷக்கிருமிகள் நீரில் விஷம் கலப்பது போன்ற நிலை ஏற்படும்.