பா.ஜ., தலைவர்களுக்கு 'செக்' வைக்கும் சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு
பா.ஜ., தலைவர்களுக்கு 'செக்' வைக்கும் சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு
பா.ஜ., தலைவர்களுக்கு 'செக்' வைக்கும் சித்தராமையா நாற்காலிக்கு வேட்டு

வாய்ப்பூட்டு
இதனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என மேலும் வாய்ப்பூட்டு போட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்து, அதன் மூலம் கட்சி மேலிடத்திடம் முதல்வர் பதவி கேட்கலாம் என்று சிவகுமார் கணக்கு போட்டு இருந்தார். ஆனால், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வெற்றி பெற்றது.
முள்ளாக மாறி..
இந்த வேளையில் தான் புதிய பூகம்பம் கிளம்பியது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் நடந்த மூடா முறைகேடு ஆகிய விவகாரங்கள், சித்தராமையாவுக்கு முள்ளாக குத்துகிறது. இந்த இரண்டு முறைகேடுகள் குறித்து பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் மேலிடம் கண்டித்ததால், பா.ஜ., தலைவர்கள் முதல்வருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிட்காயின் முறைகேடு
இந்நிலையில் சித்தராமையாவை சந்தித்து பேசிய அவரது ஆதரவு அமைச்சர்கள் சிலர், உங்களை முதல்வர் பதவியில் இருந்து இறக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். 'பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, சட்டசபையில் நாமும் தெரிவிப்போம்' என கூறியுள்ளனர்.