கோவையில் 17.37 சதவீத ஓட்டுகளே பெற்ற அ.தி.மு.க.,!
கோவையில் 17.37 சதவீத ஓட்டுகளே பெற்ற அ.தி.மு.க.,!
கோவையில் 17.37 சதவீத ஓட்டுகளே பெற்ற அ.தி.மு.க.,!

உண்மை புள்ளி விபரம் எது
சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டியளித்தபோது, 'ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் முந்தைய தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவாக பெற்றிருக்கிறார்' என குறிப்பிட்டார். இது, உண்மையென நினைத்து, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க., ஓட்டு சரிவு
ஆனால், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிந்திருக்கிறது என்பதை முன்னாள் அமைச்சர் வேலுமணி இன்னும் உணராமல் இருக்கிறார். ஏனெனில், 2014ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட நாகராஜன், 4,31,717 ஓட்டுகள் (37.24 சதவீதம்) பெற்று, வெற்றி பெற்றார்.
கவர்னர் அறிவுரை
இதை புரிந்துகொண்ட ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பின், கோவையில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் பேசும்போது, வேலுமணி தயவின்றி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்கிற பொருள் வரும் வகையில், வானதிக்கு நேரடியாக அறிவுரை கூறினார்.
பிளவுபட்ட ஓட்டு
ஜெ., முதல்வராக இருந்தபோது, 2014 தேர்தலில் அ.தி.மு.க., பெற்ற ஓட்டு - 4,31,717 (37.24 சதவீதம்). பத்து ஆண்டுகளுக்கு பின், இப்போது மீண்டும் போட்டியிட்டதில், 2,36,490 ஓட்டுகளே பெற்றிருக்கிறது; இது, 17.37 சதவீதம். இதற்கு காரணம் - அ.தி.மு.க., ஓட்டுகள் மூன்றாக பிளவுபட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர்., - ஜெ., தீவிர விசுவாசிகள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர்.