
டிச-1ல் வெளியாகும் பிரித்விராஜ் - நயன்தாராவின் கோல்டு
கடந்த ஓணம் பண்டிகை சமயத்திலேயே இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதேசமயம் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தாமதம் ஆகிறது என்றும், ரசிகர்களுக்கு நல்ல படைப்பாக பரிமாற வேண்டும் என்பதால் இந்த தாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். ஆனால் படமாக்கப்பட்ட சில காட்சிகள் அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் ரீ-ஷூட் செய்ததால் தான் இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இந்தப்படம் வெளியாகலாம் என யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முன்கூட்டியே டிசம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிஸ்டின் ஸ்டீபன் இதுபற்றி கூறும்போது, “திரைப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கலாம்.. கடவுளே தயவுசெய்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் இனி எந்த திருப்பங்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவும்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!