
இளையராஜா பேசியதை ரஹ்மான் டுவீட் செய்ய... அதை தனுஷூம் டுவீட் செய்ய...
இளையராஜாவிடம் பணி புரிந்தவர் தான் ரகுமான் என்பதும் பலருக்கும் தெரியும். கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. அவர் கொடுத்த பேட்டியை பலரும் பதிவிட்டார்கள்.
அவரது பேட்டியில் பேசியதில் முக்கியமான விஷயமாக, “ஒரு பாடல் புதிதாக பூத்த மலர் போன்று இருக்க வேண்டும்,” என்பது பலராலும் ரசிக்கப்பட்டது. ஒரு பாடலும், இசையும் எப்படி இருக்க வேண்டும் என்றும் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் ஏஆர் ரஹ்மான், இளையராஜாவின் பேட்டியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இளையராஜா பேட்டியை ரஹ்மான் டுவீட் செய்தது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்து. பலரும் அதைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்களில் இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷும் ஒருவர். ரஹ்மானின் டுவீட்டை ரிடுவீட் செய்த தனுஷ், அதில், “இந்த டுவீட்டும், டுவீட்டுக்குள் இருக்கும் விஷயமும்..."” எனக் குறிப்பிட்டு கை கூப்பும் எமோஜியையும், ஹாட்டின் எமோஜியையும் போட்டுள்ளார். இளையராஜா, ரஹ்மான் இருவரையும் மதிக்கும் தனுஷின் பதிவுக்கும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!