
நயன்தாரா - விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் நிறைவு ?
இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி பொறாமைப்பட வைத்து வந்தார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனப் பலர் கேட்பது வழக்கம்.
இன்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் மூலம் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டு ஹாட்டின் ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன் அதற்கான புகைப்படத்தில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தைத்தான் பதிவிட்டுள்ளார்.
ஒன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம், அல்லது விரைவில் நடக்கலாம். எப்படியோ விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!