
தமிழகத்தில் 100 கோடி வசூலித்த கருப்பு
உலக அளவில் 207 கோடி வசூலித்ததாக நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூர்யா பெற்றுள்ள முதல் 100 கோடி வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரமும் புதிய படங்கள் எதுவும் இல்லாததால் இப்படத்திற்கான வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட வெளியீட்டிற்கு முன்பாக சுமார் 100 கோடி வரையிலான சிக்கலில் இருந்த இப்படம் அறிவித்தபடி மே 14 வெளியாகவில்லை. அதைச் சரி செய்து மறுநாள் மே 15 அன்றுதான் வெளியிட்டார்கள்.
படத்தின் வசூல் காரணமாக அந்த 100 கோடி கடனில் குறிப்பிடும் அளவிற்கு அடைக்கும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!