
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மோதும் சத்யவான் சாவித்ரி
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. படம் குறித்து இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய் கூறியிருப்பதாவது: இந்தப் படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா த்ரில்லர். கீர்த்தி அன்பான கணவனை கொண்ட குடும்ப பெண். ஆனாலும் சாதிக்கத் துடிக்கிற ஒரு வழக்கறிஞர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் ஒரு முக்கிய வழக்கை நடத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது. அவர் வழக்கை நடத்த முடியாதபடிக்கு எமோஷனல் வலியும் இருக்கிறது. சீனியர் தவறான பக்கம் வாதாடும்போது, அதை சீனியருக்கு அவர் உணர்த்த முற்படும்போது, சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் விதமாகவும் இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதுதான் கதை.
கோர்ட்டில் கீர்த்தி சுரேஷும், சீனியர் லாயர் மிஷ்கினும் வாதங்களால் மோதிக் கொள்ளும் இடங்கள் உணர்ச்சியும், உண்மையும் கலந்திருக்கும், படத்தின் ஹைலைட்டாக அவர்களின் விவாதம் இருக்கும். என்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!