
“போரை விரும்பாதவர்களுக்கான படம்” : நீளிரா படத்துக்கு சூர்யா பாராட்டு
நடிகர் சூர்யா இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமகால சூழ்நிலையில் நடைபெற்று வரும் போரால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை. அப்படி ஒரு போர் சூழலில் திருமணம் ஒன்று நடக்கிறது. அதற்கு முந்திய இரவை அவர்கள் எப்படி கடந்து வருகிறார்கள் என்பதை ஒரு எமோஷனல் திரில்லராக கொடுத்திருக்கிறார்கள். அந்த இரவை கடந்து வந்த நபரான இயக்குனர் சோமிதரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த கால போர், இப்போது இருக்கும் நிலைமை ஆகியவற்றிற்கு ஒரு மவுன சாட்சியாக இந்த படம் நம் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் என நான் நம்புகிறேன்.. இது போரை விரும்பாதவர்களுக்கான படம். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது” என்று கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்eduvumey nadakkala nu 5 yrs ha amaithiya irukkuravar sollita