
‛பள்ளிச்சட்டம்பி என் இதயத்திற்கு நெருக்கமான படம் : கயாடு லோஹர்
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து பேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,"" என்றார்.
மற்ற ஊர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர், மேடையில் டான்ஸ் ஆடியவர் சென்னையில் ஏனோ அப்படி இல்லை, டல்லாக காணப்பட்டார் கயாடு. அவர் பேச்சிலும் அதிக உற்சாகம் இல்லை. தமிழ் கொஞ்சம் தெரியும். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். அது கிடைத்தால் தமிழில் படம் பண்ணுவேன் என குறைவாகவே பேசினார். அவருக்கு உடல்நிலை பிரச்னை இருந்து இருக்கலாம். அதனால் அவர் டல்லாக இருந்தார் என்று ஒரு தரப்பு சொன்னது.
கடந்த ஆண்டு டிராகன் படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கயாடு பின்னர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் பற்றி பல்வேறு சர்ச்சை தகவல் வந்ததால் சில விளம்பர நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!