
ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா?
முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெ றுபவர்கள், படத்தின் வியாபாரத்தில் கணிசமான தொகையை போனஸ் சம்பளமாக பெறுகிறார்கள். படம் ஓட, ஓட அல்லது அதிகவிலைக்கு விற்கப்பட்டால் இவர்கள் சம்பளமும்அதிகரிக்கும். தாய் கிழவி படம் 50 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால் ராதிகா சம்பளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழில் இந்த முறைக்கு வர நடிகர், நடிகைகள் தயங்குகிறார்கள். காரணம் படம் ஓடாவிட்டால் அவர்களுக்கான சம்பளம் குறைந்துவிடும். இப்போது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஓடாத நிலையில் எனக்கு வழக்கமான முறைப்படி சம்பளம் கொடுத்துவிடுங்கள். லாப, நஷ்டம் உங்க ரிஸ்க் என தயாரிப்பாளர்களிடம் சொல்கிறார்களாம். இந்த நடைமுறை தமிழில் வந்தால் நல்லா இருக்கும் என்று பலர் நினைத்தாலும், நடிகர்கள் நழுவுகிறார்களாம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!