
போயஸ் கார்டனில் ரூ.31 கோடிக்கு வீடு வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்
அங்கு 31 கோடி ரூபாய் மதிப்பில் டூப்ளக்ஸ் அபார்ட்மெண்ட் ஒன்றை நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட், ஒரு தனி வீடு மற்றும் கேரளா, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் சொந்த வீடு இருப்பதாகத் தகவல்.
தற்போது வாங்கியுள்ள குடியிருப்பு 14 ஆயிரம் சதுரஅடி கொண்ட சூப்பர் பில்ட்அப் ஏரியாவுடன் 2025ம் வருடம் டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 90 சதவீதம் நயன்தாராவும், 10 சதவீதம் விக்னேஷ் சிவனும் உரிமையாளர்களாம். 8 கார்கள் நிறுத்தம் அளவு பார்க்கிங் வசதி கொண்டது என்கிறார்கள்.
நீண்ட நாட்களாகவே போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீடு வாங்கியாக வேண்டும் என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாக கோலிவுட்டில் சொல்லி வந்தார்கள். அது தற்போது நிறைவேறி உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!