
சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு
அதில், இன்றைக்கு மொபைல் போன்கள் வந்த பிறகு மனிதன் உணர்வுகள் மாறிவிட்டன. எவ்வளவு வேகத்தில் காதலிக்கிறார்களோ அதே வேகத்தில் பிரியவும் செய்கிறார்கள். எல்லாமே வேக வேகமாக நடக்கிறது. அதேசமயம் ஆழமான உறவுகள் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயமில்லை. மனதளவில் நாம் தயாராக இருக்கும்போது மட்டுமே அதை செய்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!