
ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் இதுதான் : விஜய்சேதுபதி
ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. இப்போது ஜெயிலர் 2வில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு என்ன காரணம் என சமீபத்தில் விஜய் சேதுபதி கூறும்போது, “இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் ரஜினி சார் மீதான அன்பு தான். அவருடனேயே நான் இருக்க விரும்புகிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் இந்த திரை துறையில் பல தலைமுறைகளாக நீடித்து வருகிறார். அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இதுதான் ஜெயிலர் 2வில் நான் நடிக்க காரணம்” என்று ரஜினியின் மீதான தனது அபிமானத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய்சேதுபதி.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!