
செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம்
இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு மகள், இரண்டு மகன்கள். தற்போது செல்வராகவன், கீதாஞ்சிலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து செல்வராகவன் படங்கள் அனைத்தையும் கீதாஞ்சலி நீக்கியதை தொடர்ந்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.
இதுகுறித்து கீதாஞ்சலி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் செல்வராகவன் சில மாதங்களுக்கு முன் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி உள்ளது.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
அவர் அப்போது இப்படி பேசிய விஷயம், இவர்கள் இடையேயான பிரிவை தான் குறிப்பதாக வலைதளங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!