
படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : ஸ்பிரிட்டில் புதிய முயற்சி
பொதுவாக படப்பிடிப்பு நடந்து முடிந்து, காட்சிகளை எடிட் செய்த பிறகு தான் அதற்கு பின்னணி இசை அமைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் பின்னணி இசையை படப்பிடிப்புக்கு முன்பே உருவாக்கிவிட்டார்களாம். இயக்குனர் சந்தீப் சொன்ன காட்சிகளின் உணர்வில் அதற்கான பின்னணி இசையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்.
பின்னணி இசைக்கேற்பட காட்சிகளின் தாக்கத்தை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முடியும் என இயக்குனர் நம்புகிறாராம். அந்த உணர்வில் படம் பிடித்து, படத்தொகுப்பு செய்தால் அது படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தும் என்கிறாராம் சந்தீப். சினிமாவில் இதுவரையில் யாரும் இப்படி செய்ததில்லை. முதல் முறையாக ஒரு புதிய முயற்சியைக் கையாள உள்ளார் சந்தீப். அது அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது என்பது படம் வந்த பின்புதான் தெரியும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!