
பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 4 காமெடி கதைகள்
டிச 20, 2024
Advertisement
தமிழ் சினிமாவின் முதல் ஆந்தாலஜி படம் "சிரிக்காதே". இந்த படம் பெரிய வெற்றி பெற்றதும். அதே பாணியில் அடுத்து வந்த படம் "மணிமாலை". இதில் 4 காமெடி கதைகள் இடம் பெற்றது. "ஆஷாடபூபதி" என்ற கதையில் பி.பி.ராகவாச்சாரியும், ஜெயாவும் நடித்திருந்தனர். "அபூதி அடிககள்" என்ற கதையில் பி.பி.ரங்காச்சாரியும் டி.என்.மீனாட்சியும் நடித்திருந்தனர். "மைனரின் காதல்" என்ற கதையில் டி.எஸ்.துரைராஜும், கே.எஸ்.ஆதிலட்சுமியும் நடித்திருந்தனர், "நவீன மார்கண்டேயன்" படத்தல் காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது "மணிமாலை".
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது "மணிமாலை".
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!