
ஷங்கரை விமர்சிப்பவர்களைத் திட்டும் அஷ்வின் குமார்
இந்நிலையில் ஷங்கருக்கு ஆதரவாக "40 கதை கேட்டு தூங்கிய" புகழ் நடிகர் அஷ்வின் குமார் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமான "என்ன சொல்லப் போகிறாய்" படத்தின் இசை வெளியீட்டின் போது, “40 கதைகளைக் கேட்டு தூங்கிவிட்டேன்,” என அவர் பேசினார். அப்போது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அஷ்வின் குமார். இப்போது "நொடிக்கு நொடி" படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தனது இன்ஸ்டாவில் ஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து, “இந்திய சினிமாவிற்கு ஷங்கர் சார் கிப்ட், எப்போதுமே பெருமையுடன் இருப்பவர். இந்திய சினிமாவிற்கு பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய அவர் மீது மரியாதையுடனும், அன்புடனும் இருங்கள். குறிப்பு : கீ போர்டு வாரியர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அவர் ஸ்டோரியாக மட்டுமே போட்டிருப்பதால் அதில் யாராலும் கமெண்ட் செய்ய முடியாது. இருந்தாலும், அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் அஷ்வினை விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 1948ல் வெளிவந்த "சந்திரலேகா" உள்ளிட்ட சில பல படங்களில் அந்தக் கால இயக்குனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை யாராவது அஷ்வினுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!