
32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு
இந்நிலையில் இன்று(அக்., 3) நடிகர்கள் ராணா டகுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும், அமிதாப்பும் இணைந்து நடிக்கின்றனர். கடைசியாக இவர்கள் இருவரும் 1991ல் ஹும் என்ற ஹிந்தி படத்தில் நடித்தனர். அதன்பின் இணையாத இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைவதன் மூலம் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
அதோடு அமிதாப் பச்சனின் முதல் நேரடி தமிழ் படமாகவும் இது அமைய போகிறது. முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தபடம் பாதியில் நின்று போனது. இப்போது ரஜினி படம் மூலம் தமிழில் களமிறங்குகிறார் அமிதாப்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!