
50 வயதில் மீண்டும் அப்பாவான பிரபுதேவா!
இந்நிலையில் தற்போது பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறாராம். காரணம் ஏற்கனவே பிரபுதேவாவின் தந்தையான நடன மாஸ்டர் சுந்தரத்திற்கு, ராஜூ சுந்தரம், பிரபு தேவா, ராஜேந்திர பிரசாத் என்று மூன்று மகன்கள் மட்டுமே பிறந்த நிலையில், பிரபு தேவாவுக்கும் முதல் மனைவி மூலம் மூன்று மகன்களே பிறந்து இருந்தார்கள். இந்த நிலையில் இப்போது அவருக்கு மகள் பிறந்திருப்பதால் முதன் முதலாக தனது குடும்பத்திற்கு ஒரு பெண் வாரிசு வந்திருப்பதால் பிரபு தேவா பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். இது குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, 50 வயதில் மீண்டும் அப்பாவான பிரபுதேவா விற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!