
மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் நிவின்பாலிக்கு ஜோடியாக சகாவு என்கிற படத்திலும் நடித்தார். தற்போது புலிமட, ஹெர் மற்றும் அஜயண்டே ரெண்டாம் மோசனம் உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு மலையாள படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விடப்போவதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இது குறித்த அவர் கூறும்போது, “மலையாள படங்களில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அந்த மொழியை பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் படங்களில் நடிப்பதற்கும் எனக்கு சிரமமாகவே இருக்கிறது. அதனால் இன்னும் கொஞ்ச நாட்கள் சிரத்தை எடுத்து அந்த மொழியை புரிந்து கொண்டு பின்னர் மலையாள படங்களில் நடிக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!