
கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல்
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கமலுடன் எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் இவர்தான் வில்லன் என்று யாரும் தனியாக கிடையாது. டிராபிக் கான்ஸ்டபிளில் இருந்து சொந்த மகன் வரை வில்லன்களாக இருந்தார்கள்.
இந்த படத்தில் ஒரே வில்லன்தான் மெயின், அந்த வில்லனை சார்ந்த பலர் அடுத்தகட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அந்த மெயின்வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். கார்பரேட் நிறுவனத்தின் அதிபராக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மாநாடு, ஸ்பைடர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் எஸ்.ஜே.சூர்யா ஏற்கெனவே வில்லனாக நடித்திருக்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!