
போலி நியமன ஆணை மூலமாக லட்சக்கணக்கில் மோசடி: நடிகை அல்போன்சா தங்கை கைது
அவர்களிடம் இருந்து ஷோபா சுமார் ரூ.74 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இன்டர்வியூவில் தேர்வானவர்களிடம் பணி நியமன ஆணையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் போலி பணி நியமன ஆணை என்பதை அறிந்து தேர்வானவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஷோபாவிடம் விளக்கம் கேட்க சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஷோபாவை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!