
மீண்டும் ஒரு கிரிக்கெட் படம் : படப்பிடிப்பு நிறைவு
பிப் 01, 2023
Advertisement
சென்னை 28 படத்தில் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட்டை வைத்து பல படங்கள் வந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் நடிப்பில் ஒரு கிரிக்கெட் படம் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
“இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.
“இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!