
ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டிய கார்த்தி
கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாது தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. மலையாளத்தில் இந்த படத்தை பிரித்விராஜ் வெளியிட்டுள்ளார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே கன்னடத்தில் இந்த படத்தை பார்த்த பிரபாஸ், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் ரிஷப் ஷெட்டிக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி சென்னையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரிஷப் ஷெட்டியை நேரிலேயே சந்தித்து படம் குறித்து மனம் விட்டு பாராட்டியுள்ளார். தமிழில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!